கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
காதலி தென்பட வில்லை; இது
பண்புடை யோர்செயல் தாமோ? கொலை
பாதகம் பெண் செய லாமோ?
பண்கள் இசைத்துனைப் போற்றிப்- பல
சீர்மைகள் செய்திடு வேன்காண்; சிறு
கண்ணுள் மணியெனக் காவாய்க் கலி
தீர்த்தெனைக் கண்டருள் பெண்ணே!
முன்னைப் பிறப்பில் செய்த பாவம் உனை
இன்னமும் யான்பெற வில்லை - அழும்
பிள்ளையைத் தாய்விட லாமோ நறும்
தெள்ளமுதே விட மாமோ?
நல்ல பருவமுள போதே ஒரு
இல்லத்த றம்வளர்த்தல் வேண்டும் - சுடு
கோடையில் நல்லுயிர் நல்கும் குளிர்
ஓடை நிலாவொளி யேவா !
கண்ணில் தெரிவதில்லை தோற்றம் எனில்
தாய்கரு வைமறப் பாளோ - என
தாவியி லேவளர் தேவீ! உனைப்
பேணும் வரம்தரு வாயோ?
(புவனேஷ்வர்)
காதலி தென்பட வில்லை; இது
பண்புடை யோர்செயல் தாமோ? கொலை
பாதகம் பெண் செய லாமோ?
பண்கள் இசைத்துனைப் போற்றிப்- பல
சீர்மைகள் செய்திடு வேன்காண்; சிறு
கண்ணுள் மணியெனக் காவாய்க் கலி
தீர்த்தெனைக் கண்டருள் பெண்ணே!
முன்னைப் பிறப்பில் செய்த பாவம் உனை
இன்னமும் யான்பெற வில்லை - அழும்
பிள்ளையைத் தாய்விட லாமோ நறும்
தெள்ளமுதே விட மாமோ?
நல்ல பருவமுள போதே ஒரு
இல்லத்த றம்வளர்த்தல் வேண்டும் - சுடு
கோடையில் நல்லுயிர் நல்கும் குளிர்
ஓடை நிலாவொளி யேவா !
கண்ணில் தெரிவதில்லை தோற்றம் எனில்
தாய்கரு வைமறப் பாளோ - என
தாவியி லேவளர் தேவீ! உனைப்
பேணும் வரம்தரு வாயோ?
No comments:
Post a Comment