மட்டி லாதபொருள் மனைவிகண் வாய்த்தாலும்
கட்டியவன் கைத்தாரா ளாயின் - குஞ்சுடைத்த
முட்டையவள் வெட்டியகை கண்டீரோர் காஞ்சிரந்தான்
காய்த்தா லென் காய்தராக்கா லென்?
உரை:
அளவிட முடியாத செல்வம் மனையாளுக்கு சம்பளமாக வாய்த்தாலும், அவள் அதை கணவனுடைய கையில் தந்து பகிர்ந்து வாழும் குணமில்லாதவளாயின், அத்தகைய சுயநலமிக்க பெண், குஞ்சு பொரிந்து வெளியே வந்த பின் எஞ்சும் முட்டை ஓடு குஞ்சுக்கு பயன் தராதது போலவும், வெட்டப்பட்ட அழகிய கை உடலுக்கு உதவாதது போலவும், கணவனும் மனைவியும் மனமொத்து இயைந்து நடத்தும் இல்வாழ்வுக்கு பயன் இல்லாதவளே ஆவாள்.
கண்டோர் வெறுக்கும், பசிக்கு உதவாத காஞ்சிர மரம் காய்த்தால் என்ன காய்க்காவிட்டால் என்ன?