Disable text selection

October 31, 2012

An exciting new journey :)

Suddenly, existing relationships seem to fade a bit, and a sober and suave good bye comes up from within, never sad or forlorn, but with a sense of "these things are no longer relevant to me", I am going to join my friends, and spouse! I am an old man in the evening of his long life and kids now have their own kids and squabbles, my spouse has already gone to prepare the road for me, my friends are gone and the days now resemble a long wait at the terminal with the boarding pass secure. Suddenly, I am irrelevant in the younger world, a little out of place. I have no more role here to play, I surmise. My job is done, they have their own circles and I feel the silent urge to go the way my beloved ones have gone. I can see my spouse smiling reassuringly, like a guardian angel, I sometimes think of my mother and father, who would be there, and the child hood memories with my mother and father as their pampered kid spring up, sepia toned sweet memories. That enlivens me, that I would meet them soon. My days with my wife as a young man sometimes comes up and life without her makes me pine to meet her again, where she is...... I look at my children, middle aged men themselves, with furrows of life peeping up on their brows, caught up in their cycle and worries, oblivious to what goes on in this old man's mind. nevertheless, they are kids to me, kids that puked in my arms, kids I love any way. I see they can manage by themselves. I see they no longer need me. I see their mother's trail. I must now, follow her as she did all her life. Good bye my darling children, I whisper silently, God Bless you! I have done my job...... I close my eyes in the satisfaction that there is nothing more to be done, and that I am excited to meet my beloved ones.... It's an exciting new journey..... :)The end is not a sudden jerk. It's rather a gradual flowering of a new stage. But why have my eyes welled up as I type? I am still human, I suppose! <3

A PUBLIC TRIBUTE TO AN ANGEL CLASSMATE

I was not the strongest toddler to be enrolled in the kindergarten. The little urchin that I was, was hand held and taken for a trip, and I was quite amused by the unusual attire my mom had put on me. There was a white shirt, blue shorts and navy tubes into which my legs were ticklishly inserted. I learned later that they were called stockings. Then a black case was put on my baby feet and I did not like much of what would be later known to me as a shoe. To top it, she had a leash around my neck, like our cows had. I thought I was also being tied up to some pole like the cow. I discovered later that it was the neck tie! A little amused, a little puzzled and a little bewildered, I was soon back in cheer as my mom planted a kiss on my cheek. We went out, the school was a few hundred yards from home.

She dropped me in on the ground when we were inside the big blue gate and from what she had told me some days ago, I knew something like she leaving me there with other kids to play was on the cards. I clung to her saree, as a sober lady came towards us (Mrs. Winnie, my first teacher and mother of my close buddy Sherwin McGavin, and herself a good friend of mine now) and smiled at me. I was in no mood for all these pleasantries.

After some cajoling and tempting with toys, which I shall skip for the sake of brevity, I was left there and my mom left after a few more kisses and hugs. She must be cruel. Very bad mummy. I did not cry (see see, I am a strong boy) but did have a tear in my eye. Winnie Miss (!) told me something I do not remember, but must have been along the lines of asking me to come and play with other kids. I was grumpy and kept looking back towards where my mom went out of sight (I now know she did not go out but was behind a tree). And when this cheerlessness was on, a soft little hand grasped mine. I looked around and I found another little child like me. But this was different. This urchin had linger hair, and her dress looked different to what I wore. She showed all her teeth and smiled. I also gave a half smile. She spoke in Tamil, shall we play in the slide? I was happy someone spoke in Tamil. I looked around for mummy buy she was not there. Winnie miss was just smiling. Soon we were off and playing.

Fast forward 25 years. I am in academia and known to be knowledgeable and have had a reputation as a studious rank holder. I was never known to fail in academics and was known to solve calculus as a 10th standard boy. I was never known to be quiet and I was sometimes also known to be a little eccentric and vociferous. She on the other hand, was a very good student, but quiet and measured in her approach to anything, is an accomplished lady of few but almost always warm words. If I reveled in limelight - for the right and sometimes not so right reasons - she was the silent and reserved, humble in victory and gracious in defeat.

In between these two paragraphs, rests un-described, a quarter century of selfless service and fraternal love. What I had concealed so far, by choice, is the fact that I had eyes like those of an insect's and of Silas Marner, if you wish to pit it that way - short sighted or blessed with high myopia. I wore huge glasses those days, and that was reason enough for many a peer to label me “Soda buddy” and tease me. Coupled with Asthma, it ensured I was not let by teachers (upon the advice of my parents) to play on the ground like most others. Plus of course, I found it extremely difficult to follow the board and copy the notes from the board, despite the front bench arrangement. For some reason only the benevolent providence knows, she kept me company during the play times and most readily lent me her note books to copy. Not just for a year or two. From LKG to 10th standard – 10 long years! I used to spend my time mostly with books and in the library (now you know why I am how I am), and she kept company most of the time, most of the time bearing the ridicule of her own friends. She never thought twice before she lent her notes to me, just a day before the exams. We never had photocopiers back in the day, so I would have to hand copy the notes. She and I would sit and re-copy the notes in her home, as my mother and her mother happily watched us at work, while discussing something on their own. Sometimes, it meant she would score lesser than I did, but that did not deter her from helping me. She once said – “You are my brother and friend, so does it matter who scores the first rank? I do not care”. That sums it up.

I perhaps did not reflect much beyond a sense of strong friendship and gratitude those days in childhood but I now know I would not be what I am today if it were not for this little angel I met as a 3 year old. Friendships have come and gone in between. Few endured and prospered like this one.

That little girl who greeted me on the first day at school, is preparing her little boy now, to be sent to school in some days. This article is dedicated to her. I always wanted to write this, for a few years now, and only today could I materialize that wish.

I know she will read this article, I am not mentioning her name. It is enough she knows how grateful I am to all that she has given me and done for me with compassion and selfless affection. What can I do to return that kindness? What have I done to deserve such compassion and selfless, almost altruistic affection? I pray every day, for her well being. And perhaps in a future birth, I could be her mother and try to give a little of what she has given me in this birth.

She, Sherwin McGavin and Mohd. Kasim are three of my childhood friends who have been together from those days - through trials and triumphs! Love you all, my friends. Rather, siblings. God Bless you! I owe you a lot :)






October 29, 2012

அழகிய சொல்லாட்சி!

ஒரு சஞ்சிகை அல்லது நூலின் வெளியீடு எனும் பொருளில் நம் தமிழில் "இதழ்" என்னும் அழகிய பதத்தை கையாளுகிறோம். வடமொழியில் இல்லாத ஒரு சொல்லாட்சி அழகு இது என்றால் நம் தமிழ் அன்பர்களுக்கு இன்னும் குஷி அல்லவா?. அப்படி ஒன்று இது. தமிழுக்கே உரித்தான ஒரு அழகிய மொழியாட்சி.
பெண்ணின் அழகிய உதடுகளுக்கும் இதழ் என்றே பெயர். மலரின் இதழ்கள் நாம் அறியாததல்ல. மலரின் மணத்தை, எல்லா இதழ்களும் விரிந்த பின்னரே நாம் முழுதாக துய்க்க இயலும். காதலியின் உள்ளத்தை, அவள் மனம் உவந்து  இதழ் திறந்து சொன்னால் ஒழிய எந்த கொம்பனாலும் முழுதாக கண்டுபிடிக்க இயலாது!
அதே போல வெளியில் பார்த்தால் தெரியாத, படித்தால் மட்டுமே புரியும் தன்மை உடைய அறிவார்ந்த, சுவை மிக்க, பயனுள்ள சான்றோர் தந்த செய்திகளை தனக்குள் அடக்கி உள்ள புஸ்தகத்தின் வெளியீட்டையும் இதழ் என்றே சொல்கிறோம் போலும். 
+++++
பிரியங்களுடன்
புவனேஷ் 

October 24, 2012

புறப்பட்டு வா.......

பறிக்க யாருமற்ற பாலையில் ஒரு பூப்போல.....
சுவைக்க ஒரு குரங்கு கூட இல்லாத காட்டில் கனி போல....
இங்கே நிறக்குருடர்களின் உலகில் ஒரு வானவில் நான்......
நேரமாகிறது..... புறப்பட்டு வா.......
இப்படிக்கு, 
உள்ளீடற்ற உறவுகளுக்கு இடையில், 
உனக்காகவே வந்த நான்......  

முன்னேறிய பாரதம் (கவிஞர் தனுசு)

பட்டொளி வீசிப் பறக்குது
பாரதத்துப் பெருமை!
பட்டென்று தோணுது
அந்தக்
காரணங்களின் அருமை!

நம்
இந்தியத் திருநாட்டில்
லஞ்சமில்லை
ஊழலில்லை
போர்ஜரியில்லை!
நம்புங்கள்
இன்னும் சொல்கிறேன்
கேளுங்கள்!

அரசியலும் மணக்குது
ஆட்சியும் மணக்குது
மக்களும் மாறி
காட்சியும் மாறியது!

வாரிசு அரசியல்
ஜாதி அரசியல்
மத அரசியல்
சந்தர்ப்பவாதம்
சகுனி வேலை
குறுக்கு வழி
இட ஒதுக்கீடு
யாவும் ஒழிந்தது!

தடையில்லா மின்சாரம்!
திடமான சாலைகள்!
எட்டிப் பறக்கா எரிபொருள்!
பஞ்சமில்லா குடிநீர்!

தரமான மருத்துவம்!
முறையான கட்டணம்!
இலவசக்கல்வி!
கல்விக்கேற்ற வேலை!

அடிதடி
இல்லா அரசியல்!
வெட்டு குத்து
இல்லா விளம்பரங்கள்!

கட்சிகளில் கொள்கைகளே
பிரதானம்!
குடும்பத்தாருக்கு இல்லை
அதில்
வருமானம்!

மக்களின் இதயங்களில்
ஹிமாலய சிம்மாசனம்!
அது மட்டுமே ஆள்பவரின்
மூச்சுக்காற்று!

முப்பொழுதும்
மெய்ப்பொருள் தேடும்
அப்பழுக்கில்லா ஆன்மீகம்!
எப்பொழுதோ
வெறுத்துவிட்ட
இலவசம் எனும் தேன்மாயம்!

பெண்ணழிவைச் சித்தரிக்கா
சின்னத்திரை!
சீரழிவைச் சித்தரிக்கா
பெரியதிரை!

வணங்கப்படும் சாலைவிதி !
மதிக்கப்படும் சகலவிதி!
தட்சணை கேட்கா வரண்கள்
தாம்பத்யம் மாறா வரங்கள்!

ஆலயங்கள் தோறும் தரிசனம்
இதயங்களில் ஊறும் கரிசனம்!
யாருக்குமில்லை அகங்காரம்
எல்லோருக்கும் ராஜ அலங்காரம்!

மதமெல்லாம் சம்மதம்
மனிதரெல்லாம் ஓர்குலம்!
பெண்ணுக்கு முன்னுரிமை
மற்றோர்க்கு சமஉரிமை!

கடமை கண்ணானது
உடமை பொதுவானது!
கண்ணியம் உயிரானது
புண்ணிய மண்ணானது!

நேர்மை
இங்கே கொடிபிடித்ததோ
நிமிர்ந்த பாரதம்
நடை போடுதோ?

இத்தனை பூரிப்பைத்தரும்
பாரதத்தால்
வியப்படைய வேண்டாமா?

வேண்டாம்!
இவையாவும்
நிஜத்தில் நடக்குமா தெரியவில்லை
அதனால்
என்
கவிதையிலாவது இருக்கட்டுமே
முன்னேறிய பாரதம்!!!!

-தனுசு-

October 23, 2012

திருமணமும் தீயும் - பெண்ணின் கடமை, வேத மதம்

ஒருத்தனை அவன் இந்த உடலை நீத்த பின் மண்ணில் இட்டு புதைக்கிறார்கள். இன்னொருத்தனை எரிக்கிறார்கள். கேட்டால் கலியாணம் பண்ணி  வாழாதவனை புதைக்கிறோம் விவாஹம் ஆகி வாழ்ந்தவனை எரிக்கிறோம் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன? பாமரத்தனமாக தெரிந்தாலும். இதற்கு ஆதாரம் வேத மதம் தான்.  அவர்களுக்கு தெரிவதில்லை. சாரத்தை விட்டு விட்டு சம்பிரதாயத்தை மட்டும் பிடித்து கொண்டுள்ளார்கள். கொஞ்சம் பார்ப்போம்.

பிரம்மச்சாரிக்கு அக்னி கார்யம் இல்லை. க்ருஹஸ்தனுக்கு உண்டு. வானப்ரஸ்தனுக்கு உண்டு. சன்யாசிக்கு இல்லை. ஏனெனில் அவன் தான் சன்யாசம் வாங்கும் போது அக்னியை தீர்த்தத்திலே விட்டு விடுகிறானே. நேரே பிரம்மச்சர்யத்தில் இருந்து சன்யாசம் என்றால் அந்த ஸ்பெஷல் கேசுக்கு அதுவும் இல்லை.

விவாக காலத்திலே தானே வளர்த்த அந்த பவித்ரமான அக்னியை ரக்ஷிக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே நெல்லை கைகுத்தல் அரிசியாக்கி அந்த உமியை வேத முறைப்படி இட்டு அணையாமல் ரக்ஷிக்க வேண்டும். இந்த கடமை பத்னிக்கு. அதனால் தான் அவளை வீட்டிலேயே வைத்து. பெண்களுக்கு வேத கர்மாக்களில் பங்கில்லை என யார் சொன்னது? வேண்டுமென்றே தவறாக சொன்னது. பத்னி இல்லாமல் யாரும் யாகமோ அக்னி ஹோத்ரமோ பண்ண இயலாது.  இப்போது இவளும் வேலைக்கு போகிறேன் என்று பறக்கிறாள். யார் அக்னியை ரக்ஷிப்பது? யோசிப்போமா?

சன்யாசம் ஏற்காமல் ஒருத்தன் ஜன்மா முடிந்தால், அவன் பண்ணுகிற கடைசி ஆகுதியாக அவனுடைய தேகத்தை அந்த அக்னியில் தான் எரிக்க வேண்டும். எந்த அக்னியை விவாகம் முதல் ஆயுஸ் பர்யந்தம் அவன் ரக்ஷித்தானோ அந்த அக்னியே அவன் தேகத்தை எரித்து தேவர்களிடம் க்ஷேமமாக அவனை சேர்ப்பிக்கும். சிதையில் வைத்த பின் அந்த அக்னியை கொண்டு தான் அவன் பிரேதத்துக்கு - மிருத சரீரத்துக்கு - எரியூட்ட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கான வழிமுறைகள் விரிவாக உண்டு. கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி அல்லது அக்னியை விட்ட சன்யாசி உடல் விட்ட போது எந்த அக்னியால் அவனை எரிப்பது? அதனால் தான் அவர்களை மண்ணில் புதைப்பது.

அக்னி கார்யம் இல்லாத பிற மதஸ்தர்களும் சரீரத்தினை புதைக்கிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டும். ஆக, உடலை எரிப்பது என்பது வேத பரமான ஒன்று. இதனை நினைவில் கொண்டு நாம் செயல் பட வேண்டும்.

ஸ்ரீ மகா பெரியவா பாதங்களே துணை

October 20, 2012

காலகாலன் பாதம் வாழும்நாள் மறப்பதில்லை

தும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்
வீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்
நம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை
சூழ்ந்தணைத் துடன் வருவான்;
ஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்
வாழும்நாள் மறப்பதில்லை - தில்லை
தாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு
கோலநட மாடுஞ் சிவனே! நல்ல
சோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை
ஊளையிட வைத்த பரனே!

October 17, 2012

என்ன(டா) அவசரம்?

மூன்று கேமெராக்கள் பொருத்தப்பெற்ற பிரசவ அறையில் சமீபத்தில் ஒரு சுகப்ப்ரசவம் (ஒரு படத்தில் இடம் பெறும் காட்சிக்காக) படமாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி ஊருக்குள் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது என்னவோ பிரசவம் பற்றி விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தும் என பலர் பாராட்டுகின்றனர். எனக்கென்னவோ இது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகத்தான் படுகிறது.

தான் மட்டுமே (அல்லது) தன் கணவனுடன் மட்டுமே பகிர்ந்து, அனுபவிக்கக்கூடிய ஒரு உணர்வுபூர்வ, உன்னத தருணத்தினை எந்த ஒரு காரணத்துக்காகவும் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

எல்லா கண்ணும் நல்ல கண் அல்ல. அறிவுக்காக பார்க்கும் கண்களை விட, பெண்ணுடலைப் பார்க்கும் வக்கிர ஆசையால் பார்க்கும் கண்கள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

அட, அறிவுக்காக பார்க்கிற உத்தம சிகாமணி கூட, திருமணம் வரை காத்திருந்து தன்  மனைவி பிரசவிப்பதை பார்க்கலாமே? அப்போது கற்றுக்கொள்ளட்டுமே? அதற்கு முன்னரே குழந்தை பிறப்பதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆணுக்கு அப்படி என்ன அவசரம் மற்றும் தேவை? அப்படி முன் கூட்டியே தெரிந்து கொண்டு மட்டும் என்ன பண்ணப்போகிறான்? புரியவில்லை.

எல்லாவற்றுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல், நேரம், காலம் இல்லையா? காத்திருக்க முடியாதா? கலவியை கூட கல்யாணத்துக்குப்பின் தான் கற்றுக்கொள்கிறோம் (நல்ல, பண்பட்ட ஆட்களை நான் சொல்கிறேன்).

சரி, அப்படியே புரிதலுக்காக, விழிப்புணர்வுக்காக என்று பிதற்றிக்கொண்டு இதனை சகஜமாக்கி விட்டால், இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து, விழிப்புணர்வு/புரிதல் என்னும் பெயரில் தாம்பத்திய உறவையும் படம் எடுத்து படம் வெளியிடுவார்களோ என்னமோ? கலி காலம்.  ஈஸ்வரா!

அது மட்டும் அல்ல, நாளை அந்த குழந்தை பெரியவளாகிய பின் அவளுக்கு இது பிடிக்குமா என்று நமக்கு தெரியுமா? இது அவள் மனத்தில் காயத்தை ஏற்படுத்தினால்?

ஓரளவுக்கு எல்லாருக்குமே பிரசவம் பற்றி தெரியும். சம்பந்தப்பட்ட கணவர்கள் வேண்டுமானால் பிரசவ வேளையில் தத்தம் துணைவியரோடு கூட இருந்து அந்த வலியை, வேதனை விரவிய பரவச தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம். தப்பே இல்லை. அது மனைவிக்கும் தைரியமாக, சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் education/awareness என்கிற பெயரில் ஊருக்கே காட்டுவது கலாசார சீரழிவு மட்டும் அல்ல, கணவன்-மனைவி என்னும் பவித்ரமான பந்தத்துக்கு ஏற்படுத்தும் இழுக்கு (இருவர் சம்மதமும் இருந்தாலும் கூட).

சில விஷயங்கள் புருஷன் - பத்நீ இருவருக்குள் தான் இருக்க வேண்டும். மூன்றாம் ஆளுக்கு தெரியக்கூடாது. புரிதலுக்காக என்று சொல்லிக்கொண்டு அதை அல்பங்களுக்கும் அம்பலமாக்கும் அவலம் எதற்கு?

சிந்திப்போமா? கருத்துப்பரிமாற்றங்களை வரவேற்கிறோம்.

+++++

பிரியங்களுடன்
புவனேஷ்

பி. கு: எழுபதுகளில் குப்த்ஞான் என்ற ஒரு திரைப்படம் வெளி வந்து சில அலைகளை உருவாக்கியது சிலருக்கு நினைவிருக்கலாம்.

கட்டுரையின் கடைசி வரிகளில் அல்பங்களுக்கும் அம்பலமாக்கும் அவலம்"என்று நான் எழுதி இருந்தேன் அல்லவா, அது இம்மாதிரி காணொளிகளை காணும் யாருக்கும் பொருந்தும். ஒரு ஆடவன், தன் மனைவி அல்லாத ஒரு வயது வந்த பெண்ணை, அதிலும் மாற்றான் மனைவியை எந்த கண்ணோட்டத்தில் எதற்காக பார்த்தாலும் அல்பத்தனமே. அது பெற்ற மகளாயினும் சரி, கூடப்பிறந்தவளானாலும்  சரி. அதற்காகத்தான் பிரசவ அறையிலும் மருத்துவச்சிகளை நாம் காலம் காலமாக வைத்தது.

October 15, 2012

Character counts!

எத்துணைதான் அன்புசெய்து நட்டாலும் கீழ்மக்கள்
கிட்டுபொருள் தாம்கொண்டு கைவிடுவர் - தொல்லுலகில்
அட்டபாலும் அம்பாகும் வேர்பெய்து வளர்த்திடினும்
எட்டிமரம் காய்க்காது மா!

(Bhuvaneshwar D)


பொருள்:

எத்துணை தான் நாம் அன்பு செய்து நட்பு பாராட்டி இருந்தாலும், கீழ்மக்கள் நம்மிடம் கிடைக்கும் பொருளை சுருட்டிக்கொண்டு, சமயம் நேர்ந்த போழ்து நமக்கு உதவாமல் கைவிடுவர். தொன்மையான இந்த உலகில், சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய பாகும் (அம்பாகும் = அம + பாகும் = இனிய பாகும்) எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது (கசப்பும் விடமும் உள்ள எட்டிக்காயை தான் தரும்)

October 3, 2012

கப்பலே கவிழ்ந்தாலும்.....

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே - என்று ஒரு பழமொழி உண்டு. பாட்டிகள் கூட பிள்ளைகள் கன்னத்தில் கை வைத்திருந்தால் "ஏண்டா கப்பல் கவிழ்ந்தாற்போல கன்னத்தில் கை வைத்து இருக்கிறாய்?" என்பார்கள். ஆனால் இதன் உண்மையான பொருள்? முகத்தில் கன்னத்தில் கைவைப்பதை தடுக்க ஏற்பட்டதல்ல.

கன்னம் என்பது கடப்பாறையை போன்ற ஒரு சாதனம். கன்னக்கோல் என்பர். திருடுவதற்கு, சுவற்றில் துளையிடவும், பூட்டுகளை உடைக்கவும் கதவுகளை தகர்க்கவும் பயன் படும்.

அந்த காலங்களில் பெறும் வணிகர்கள் தங்கள் பொருட்களை கப்பலின் ஏற்றி பிற நாடுகளுக்கு அனுப்பி, பொருள் ஈட்டி வருவர். அந்த கப்பல்கள் போய் வரும். இவர்கள் வீடுகளில் இருப்பர். செட்டி நாட்டில் இது போல பெரிய வணிகர்கள் உண்டு. பட்டினத்தாரும் அப்படி இருந்து துறவு பூண்டு போனவர் தானே.

அந்த கப்பல்களில் ஏதாவது விதி வசத்தால் கவிழ்ந்தால் தலைமுறைக்கும் ஆக வேண்டிய பொருள் நஷ்டமாகும். பல கப்பல் உடையவருக்கே அப்படி எனில் ஒரு கப்பல் மட்டுமே உடைய வாணிகனுக்கு எப்படி இருக்கும்?

அப்படி கப்பலே கவிழ்ந்து போனாலும், தவறியும் கன்னக்கோலை கையில் எடுத்து திருட்டு தொழிலில் இறங்கி விடாதே என்னும் பொருளில் தான், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே என்று சொல்லி இருக்க வேண்டும்.

October 2, 2012

Charity begins @ home :)

வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்காமல், அவர்களுடைய நியாயமான அபிலாஷைகளை, எதிர்பார்ப்புகளைக்கூட நிறைவேற்றாமல், ஊருக்குள் என்ன நல்ல பெயர் எடுத்தும், எத்தனை பிரபலமாகியும், ஊருக்கு உபதேசம் பண்ணியும் தம்படி பிரயோஜனம் இல்லை. ஊருக்கு உண்மையாகவே சமூக சேவை செய்தால் கூட வீட்டில் உள்ள உற்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கும் அதிருப்திக்கும் ஆளானால், சேவையால் கிட்டும் நற்பலனை விட இவர்களுக்கு செய்யும் பாபமே அதிகமாக மிஞ்சும். தன்னை முன்னிலைப்படுத்தி வினையாற்றும் அற்பர்களுக்கு குடும்பம் ஏன்? அவர்களுக்கு குடும்பமும் ஒத்து வராது, துறவும் கிடைக்காது. அதை தான் ஆங்கித்தில் அழகாக நறுக்கு தெறித்ததுபோல Charity begins at home, என்று சொல்லி வைத்தான்!

October 1, 2012

Helpless in love!

"கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல"  - இரு கைகளும் அற்ற ஒரு ஊமை. அவனிடம், ஒரு பாறை  மீது வெண்ணைக்கட்டியை வைத்து "இதனை காத்து வா" என ஒருவர் ஒப்படைத்து செல்கிறார்.

வெயில் ஏறுகிறது, பாறை சூடாகி, அந்த வெண்ணை உருகத்துவங்குகிறது. அருகில் யாரும் இல்லை. ஊமையாதலால் யாரையும் உதவிக்கு அழைக்கவும் இயலாமல், வெண்ணையை காப்பாற்ற கைகளும் இல்லாத அந்த கையற்ற ஊமை தவிப்பதை போல, அடியே தோழி நானும் காதல் எனும் நோயினால் அல்லற்படுகிறேன்.   என் உள்ளம் கவர்ந்த அவரிடம் சொல்லவும் இயலவில்லை, இந்த பாழாய்ப்போன வெட்கம்  தடுக்கிறதே! அவரும் ஒரு அசடு போல, தானாக புரியவில்லை. நான் என்னடி செய்வேன்?
++++++++++
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஒரு ஆண் மகன் தன் தோழனிடம் தன் காதலின் கையறு நிலையை விவரிக்கும் வரிகள் தான் "கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல" . இது ஒரு பெண் சொல்லுவது போல இருந்தால் பொருத்தமாக இருக்கும் என தோன்றியதால் நான் இதனை பெண்பாலில் எழுதினேன்.

காந்தி ஜெயந்தி! (கவிஞர் தனுசு)

காதி கட்டிய கிழவன்
இந்த
பெருங்கிழவன்!
இவன்
மோதி முட்ட பணிந்தான்
பரந்து கிடந்த பரங்கியன்!.

மூத்திர  சகதியில்
இருந்த இந்த மூத்த இனத்தை
சூத்திரம் செய்து
பத்திரம் செய்தவன்!

இந்த
ஊருக்கு உழைத்தவனை
உலகுக்கு சேர்த்தது
அவனது உண்மை!


அகிம்சை என்பதே
அவனின் எண்ணம்
அதை போதித்தான்
உலகம் புரியும் வண்ணம்!

உடைந்து கிடந்த இந்தியா
இடிந்து போன இந்தியர்
இகழ்ந்து பார்த்த உலகம்
இவனால்
திரும்பி பார்த்த அதிசயம்!

தடி ஊன்றிய தாத்தா
எங்களின்
தேசப்பிதா...
நீ ஜனனம் கண்ட இந்நாளில்
உன் மந்திரம் ஜபித்து மகிழ்கிறேம்
ஜெய்ஹிந்த்!
-தனுசு-