Disable text selection

October 30, 2010

If she had words

Mom, I am dying,
I know I am,
I know I am an unwelcome guest,
An unwelcome guest to people,
To people born of mothers,
To people with sisters and
To people who married women for wives.

I am an unwelcome guest,
For, to them I am born with bills,
Bills due for buying a bridegroom.

I am dying, dying in the very arms,
In the very arms of yours.......
I sympathise with you mom,
I feel sorry to feel your heart,
The heart, which aches with agony,
I feel sorry to see your pains,
To see the pains, the pains you bore,
To bring me here unharmed, in vain.
I’ve come here, only to be harmed........

I won’t blame you, mummy…
I know that you loved me,
And that you do love me still........

Now, in some time,
When you are to lose me and my love ,
I have a wish mom, the last wish,
The last wish of your sweet,
Which, if you will, can fulfil.....
Which I hope you will;

Before your hands are forced to feed me,
To feed me from your sweet hands,
That sweetened poison, sweet because you feed,
Feed me with your milk of love,
The love that I’ll never get,
The love whose labour is lost.....

Forget me not, mom,
I know you will not,
Remember me please,
Remember me when my brothers are pampered,
To tell them of a sister or perhaps sisters they had.

I am not angry with you,
I know you love me........
I will not blame you,
For it’s not you to be blamed,
But our men........
Those who speak for women,
Speak of our grace to save their face,
Boast our greatness and bury us in their backyards,
Need one woman to kiss and another to kill…….

But I thank them too, for
They’ve made me escape misery,
The pain of being burnt alive,
The trauma of killing my daughter,
I am spared of that agony,
Because, I am dying young.

They are the ones to miss me,
Miss a Gargi or a Maitreyi,
Miss a Sarojini or an Indu,
Miss an Agnes or a Curie.........

I have nothing to miss, dear mom,
Except you and your love.
I too love you, Mom,
Yes, I really do love you.

Now go on, feed me,
Please feed me by my wish,
And then feed me with the sweet poison,
Feed me as you were instructed,
And then, put me to sleep,
Singing lullabies I’ve never heard,
Singing those I’ll never hear.

Put me to sleep, a peaceful slumber,
In mother Earth’s bosom,
Who at least, will deliver me into a world,
Where I am not a guest unwelcome,
Where I shall meet you later,
Or even my sisters.........
Where none shall make us part.

Now, mummy, kiss me and go on..........
Cry not my beloved mother…..
Please cry not…… for you know that I love you,
And we know, we love each other.....……………………………………………………………….

The prostitute

These days, she was not to be seen there,
There in her usual place,
Beside the doorstep of her dungeon home
Or a hole I should say,
That lies at the far end of the busy lane I lived in.
As Sun fell down and the stars came out,
And darkness swathed in a stride,
When men came home and children cried
Refusing their evening meals,
She would be there, with a made up look
And an accented tongue;
She must have been 20, I surmise…
Perhaps younger still.
There would be a few going to her:
A few for lust, fewer still for love;
Not unusual it seemed then, but things changed lately;
These days, she was not to be seen there,
There in her usual place.
Something, I don’t know what,
Made me curious - I wanted to know,
What had happened to her? I wanted to know.
People, rather dismissive of her, told me,
She had succumbed to illness;
“It was AIDS of course” - someone promptly added;
They were to burn her few belongings, for fear of a pandemic.
And among those consigned to the flames,
There was a worn out teddy bear………..

October 29, 2010

களிப்பில் கவிதை......

காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் - உயர்

காதல் நலமெனவே களி நடமிடுவோம்;

காதலது நல்லின்பம், காதலி தெய்வம் - அதில்

ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

போகத்தில் யோகம் - ஓர் அலசல்

மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கொண்டவள் கைப்பிடித்து, முலைகள் முகம் பதித்து மடியில் தான் கிடந்தது, மனையறம் தான் படந்து வாழ்வோன் போகி.... அதுவும் ஒரு வகையில் யோகமே..... பக்திக்கு இடமிருந்தால் முக்திக்கு வழியுண்டு...... யார் மேல் பக்தி? அடுத்தவனையும் நானாக, எனக்குள் ஓர் அங்கமென பாவனை செய்து சம பாவம் கொண்டு பரிபக்குவம் அடைதல் ஒரு வகை..... அது பாவச்பந்தனம் எனப்படும்...... அதனினும் மேலாம் நிலை ஒன்றுண்டு..... அவனுக்கு/அவளுக்கு உள்ளே இறைவன்.... நான் நீசன்..... அவனுக்கு - இறைவனுக்கு தொண்டு செய்கிறதாய் பாவித்து பிறர்க்கு தொண்டு செய்தல் இவ்வகை..... இது "நைச்சியம்" எனப்படும்.......... முந்தையதில் அகந்தைக்கு இடம் உண்டு..... வரலாம்..... வாய்ப்புண்டு..... பிந்தையதில் அகந்தை என்ற பேச்சே கிடையாது...... மனைவி அணைப்பில் மாயவனை பார்த்தால் என்ன? அங்ஙனம் ஒரு இல்லறத்தான் நினைப்பானேனில், அவனுக்கு கோயில் குளம் தேவையில்லை....... அத்தகைய மேலாம் இல்லறம் முக்திக்கு முதல் படி....... தன் சுகத்துக்காக தன் துணையை பயன்படுத்திக்கொள்ளும் உடல் அனுபவ வெறி இருந்தால் இது நடக்காது..... மனைவியை இவனும், கொண்டவனை அவளும் பக்தியோடு அணைந்தால்? அது பூரண ஒப்புதல்..... ஒப்படைத்தல்..... பரிபூரண நம்பிக்கையும் காதலும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் சங்கம சங்கீதம்..... ஆத்மாவின் ஆனந்த ராகம்...... அதற்கு சரீரம் தாளம் மட்டும் போடும் அனுபவ கச்சேரி..... உள்ளக்குடம் உடைந்த கணம் உணர்வுகள் ஊற்றெடுக்க, அன்பு ஆறாக, நீ - நான் வேற்றுமை நீறாக, பாசம் பிரவகிக்க, அண்மைக்கு அர்த்தமின்றி, அனுபவிப்பவனுமில்லை, அனுபவிக்கப்படுபவளும் இல்லையென்றாகி அனுபவமே மிஞ்சும் நிலை.......
முக்தி என்றால் என்ன? இறைவனும் பக்தனும் இரண்டேன்ற நிலை பொய், ஒரே இறை நிலை தானே முக்தி? முக்திக்கு முதல் படி இங்கே ஆரம்பம்..... துணைக்குள் தேவனை கண்டால், துணையின்றியும் அடையலாம்..... இதிலே இயலாமை- இறைவனை காட்டாது...... உடலெடுத்து வந்த போதே உடனிருந்தும் உணராதவன், உருவமிலாப்பெருநிலையை ஒருநாளும் உணரான்..... இறைவனின் உருவம் இதோ உன்னுடன்..... கோயில் கற்சிலை முன் கும்பிட்டு நின்றவனே! கொண்ட பொற்சிலை பரமாத்மா வாழுமிடம்..... போகமும் யோகமும் ஒருசேர உனக்களித்து இகத்துக்கும் பரத்துக்கும் பெருந்துணையாய் வந்தது - நீ கல்லில் தேடும் இறைவன்........ போகியே, விழித்தெழு..... இன்றிரவே உன் யோக சாதனம் தொடங்கட்டும்..... மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கவலை கொள்ளாதே...... நீயும் யோகி தான்...... நீ விரும்பினால்...... இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்? மானிட வர்க்கத்தை வளர்த்து விடு...... நீயும் முக்தி அடை...... :)

காதல் கவிதை!

சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று
செம்மாந்து வருமாப்போல் வந்தாய்;
செந்திருவன்னாயுன் சோதி முகங்கண்டு
சிந்தை திறை கொடுத்தேன்;

நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்
வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;
அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் - என்றும்
தேயாத திலகமிட்ட திங்களடி நீ.

நினைக்கின்றேன் உன்னை நான், என்
நினைவினில் வாழ்கின்றாய் நீ;
பனிக்காலப் போர்வை போலும்
இனிக்கின்ற இதம் நீ என்னில்;

ஒரு மனைவியின் புலம்பல்

இரவின் இருளில் நிலவு துணை எனக்கு
அமாவாசை அதுவும் இல்லை;
குளிருக்கு கதகதப்பு
கம்பளி கொடுத்தால் உண்டு;

மாதம் முப்பது நாள், மூன்று நாள் மட்டும்
மல்லிகை மணம் இல்லை மாதரார்க்கு;
எனக்கென்னவோ மூன்றும் முப்பதும் ஒன்றுதான்....
வித்தியாசம் சைபர் தானே.......

வாயும் வயிறுமாய் வாழ்ந்திருக்க வந்தவளை
வாய்க்கும் வயிற்றுக்கும் அலைப்புண்டுழல விட்டாய்;

கற்பழித்தாய், கொலை செய்தாய்,
ஆயுள் கைதியாகி சிறை சென்றாய்......

ஒரு பெண்ணின் வாழ்வை (மட்டும்) நீ கெடுத்தாய்
என சட்டம் சொல்லும்.....
உண்மை அதுவா? உனக்கே புரியும்.....
ஒரே ஒருத்தியின் வாழ்வை மட்டுமா நீயழித்தாய்?

செய்யாத தவறுக்கு சிறை சென்ற பெண்ணிங்கே
சீதை மட்டும் தானா?
கற்பழித்தாய், கொலை செய்தாய்,
ஆயுள் கைதியாகி சிறை சென்றாய்......

தாலி விலங்காக, தனிமை சிறையாக
நானும் ஆனேன் ஆயுள் கைதி......
உன்னால்..........

யாரிவள்? நெஞ்சே, சொல்வாய்! - தலைவன் தன நெஞ்சொடு உரைத்தலாம்

வானின்று வீழ்ந்த மதி கொலோ? அன்றித்
தானின் றலர்ந்த தாமரை கொலோ முகம்;
காணிற் காரலை காரிகை கூந்தல்
நாணிச் சிவந்த திவ ளிதழ் கண்ட பவளம்,
நாணறு சிலையாம் புருவம்; நுதல் ஒள்பிறை காண்;
யானின்று காணுதும் நெஞ்சே, யார் கொல்? சொல்!
வான் கொண்ட மஞ்சுசேர் தண்பொதிகை வரையும்
தான் கொண்ட தனி மதுரை மகள்!

பொருள்:

தலைவன் உரைத்தல்:

(என்னுடன் இதுகாறும் இருந்த நெஞ்சே கேள்;) வானின்று சாபத்தால் மண்ணுலகின் கண் வீழ்ந்த நிலவோ இல்லை இன்று மலர்ந்த தாமரையோ இவள் முகம்?

அளப்பரிய ஆழமுடைய கடலின் கரிய அலை எழுந்து வீழும் தன்மை உடையதாக இவள்தன் கரிய குழல் எழுந்தும் வீழ்ந்தும் ஆடுகிறது; அக்கடலின் அடியில் பிறந்த பவழம் இவள் இதழ் கண்டு நாணம் கொண்டு சிவந்தது போலும்! நாண் அவிழ்ந்த (பின்னும்) வளைந்த தன்மை உடைய வில்லினை ஒத்தது இவள் தன் புருவம்; ஒளிரும் பிறையை (ஒள் பிறை) ஒத்தது இவள் நெற்றி (நுதல்); இவள் யாரோ? நெஞ்சே, நீ தான் இப்போது என்னோடு இல்லாமல் அவளோடு போய் விட்டாயே, ஆதலால் நீ அறிவாய்! சொல்!
பின் தலைவன் உணர்தல் (நெஞ்சு உரைப்பதாக அமைக்கப்பெற்றது):
வான் கொண்ட: பாண்டியனோடு இந்திரன் பகை கொண்டு மழை பொழியாமல் நிற்க, பாண்டியன் அம்மேகம் தன்னை சிறை செய்து மழை பொழிவித்தான் என்னும் வரலாறு உண்டு: ஆகையால் வான் கொண்ட மதுரை; அந்த வானம் கொண்ட மேகம் சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய பொதிகை மலையும் கொண்ட சிறப்பு பொருந்திய மதுரை கண் வாழும் இளவரசி/பெண்.........

ஒருவரிக்கவிதை:

என்னில் கலந்த பெண்ணோ இவளென் கண்ணில் விழுந்த மண்ணோ?


அதாகப்பட்டது, இந்தப்பெண் கொஞ்சம் விசித்திரமானவள்: எனக்குள் இரண்டறக்கலந்து விட்ட காதலியாகவும் இருக்கிறாள், அதே சமயம், எங்கு எதை, யாரைப்பார்த்தாலும் எனக்கு அவள் நினைவாகவே மாற்றிவிட்டாள், கண்ணிலே விழுந்த மண் எங்கு திரும்பினாலும் கண்ணை உறுத்துவது போல!