Disable text selection

February 3, 2013

தொடுவான உறவுகள்....... (புவனேஷ்வர்)

எங்கோ நுகர்ந்த வாசங்களை......
அன்று யாரோ விட்டுப்போன
சிதைந்து போன சுவடுகளில்
பாசமழை பட்ட மண்வாசனைகள்....... இன்று
தேடுகின்றேன் உன்னிடம் இனம்புரியாமல்.......
தூரத்து நினைவுகளில்
தொட்டுப்பழகிய ஏதோ ஒன்றை
தேடித் துழாவுகின்றேன் அரைமயக்கத்தில்......
தொடுவான நினைவுகளாய் வெள்ளி நிழல்கள்.....
எதிர்வரும் முகத்தை எல்லாம்
"அம்மாவோ?" என்று நோக்கும்
சந்தையில் தொலைந்த சேய்போல்......





2 comments:

Unknown said...

nice poem. write some poem about amma

Unknown said...

kavithai nalla irukku.continue ur writing