Disable text selection

December 31, 2013

பிராண நாதன் - பகுதி 2 :))

"டீ..... முத்தே...."
"என்னைக்கும் இல்லாத திருநாளா என்ன திடீர்னு முத்தேன்னு கொஞ்சல்?"
"உன்னண்டை நான் ஒன்னு கேப்பேன், டியா?"
"என்னவாம்"
"உன்னைப் பொண் பாக்க வந்தேனோல்லியோ...."
"ஆமாம், வந்தேள்"
"அப்போ, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ன்னு சொல்லியிருந்தேன்னா நீ என்ன பண்ணியிருப்பாய்?"
"என்னோடு அப்பா பார்த்த இன்னொரு மாப்பிள்ளையை கலியாணம் கழிச்சுருப்பேன்."
"அடிப்பாவி!"
"ஏன்?"
"உங்களுக்காக, உங்கள் மனம் மாற, மாறி என்னை ஏற்றுக்கொண்டு அருள் புரிய, நாற்பது சதுர் யுகமானாலும் காத்திருந்த்திருப்பேன் நாதா"ன்னு நீ சொல்லுவாய்ன்னு எதிர்பார்த்தேன்."    
"கல்பாத்தி மொளகா பஜ்ஜி நன்னாருக்குன்னு சொல்லி ஒரு டப்பாவிலே அதை பார்சல் பண்ணிகிண்டேளே, அதைப் பன்னாதேக்கி இருந்திருந்தால், நானும் யுக யுகமானாலும் உமக்காக காத்யாயினி விரதம் இருந்து காத்திருந்திருப்பேன்"  
"இது தெரிஞ்சும் ஏன் என்னை கெட்டிகிண்டாய்?"
"கல்பாத்தி பஜ்ஜி நன்னாருக்குன்னதும் சாப்பட்டதை பொறுப்பா பார்சல் பண்ணிக்கறான் புள்ளாண்டான், நாளைக்கு ஹோட்டல்லயும் இதே போல பார்சல் கெட்டிக்குவான், நம்ம பொண்ணுக்கு வேலை சுலபமாக்கும், நம்ம பொண் பாடரத்தே ஒத்தா பாடறானே, நல்ல ரஸிகனாக்கும்"ன்னு பாட்டி சொன்னா. அதனாலயாக்கும் உமக்கு கழுத்தை நீட்டினேன். போறுமா?"
"நேக்கு அப்போவே தெரியும். என்னை உள்ள படி புரிந்து கொள்ளும் சக்தி உன் பாட்டிக்கு மட்டும் தான் உண்டுன்னு. சரி, இன்னைக்கு என்ன? கீரை மொளகூட்டலும், பொரிச்ச சக்கையும், சேனை மசியலுமா? 
"ம்ம்ம்? மொளகுரசமும் சுட்ட பப்படமும்"

----
(புவனேஷ்வர்)

No comments: