Disable text selection

June 22, 2012

முருகன்-துதி

காரிருள் குழலாள் குழவி ஆறிரு வந்தோள் போற்றி;

சீறிடு முறுபகை மாற்றும் தாரணி வோன்வேல் போற்றி;

மாறிடு மனத்தோர் வஞ்சம் காறிடுங் குழந்தை போற்றி;

சோறிடும் எந்தை போல்வான் ஆறுவாய் குடக்கோ போற்றி!

 

ஐந்தலைப் பொதிகை தங்கும் பைந்தமிழ் பிள்ளை முனிவன்

மைந்தனாக் கொண்டு லகோர்க்கு நைந்திடாத் தென்மொழி யீந்த

அஞ்சிறை மயில் மீதேகி அஞ்சிடும் மான்விழி எழுவர்

மிஞ்சிடும் பிள்ளையி னன்பால் கொஞ்சிடும் கோவே போற்றி;

+++++

ஆறிரு வந்தோள்: ஆறு + இரு + வன் + தோள் = பன்னிரண்டு வலிய தோள்கள்

தாரணி வோன்: தார் + அணிவோன் (தார் - முனை கட்டப்படாத மாலை; திருச்செந்தூர் வேலன் படம் காணவும்)

ஆறுவாய் குடக்கோ: ஆறு முகம் உடைய, மலைகளுக்கு (குடம் - மலை) அரசன் (முகத்துக்கு வாய் எனும் சொல்லையே பயன்படுத்துவது வடமொழியின் இயல்பு)

மைந்தன் = சீடன்;

அஞ்சிறை: அம் + சிறை = அழகிய சிறகு

அஞ்சிடும் மான்விழி எழுவர்: மருண்டு விழிக்கும் மான் போன்ற கண்களை உடைய பெண்கள் எழுவர் - கார்த்திகை பெண்டிர் மற்றும் பார்வதீ தேவி 

கோ: அரசன் - பிள்ளையை ராஜா என கொஞ்சும் பொருளில்.

No comments: