Disable text selection

September 23, 2012

கவிஞர் வாலியின் பொருள் பொதிந்த வரிகள்!

கவிஞர் வாலியின் பொருள் பொதிந்த வரிகள்:

"கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப்பெண்ணா மாறாதோ, மையேந்தும் கண்ணைக்காட்டி மையல் தீரப்பேசாதோ"......

காமப்ப்ரதானமாக கிறுக்கும் இன்றைய பல கவிஞர்கள் கவனிக்க வேண்டிய வரிகள்..... "மையேந்தும் கண்ணைக்காட்டி மையல் தீரப்பேசாதோ"..

என்ன இருக்கு? வாஸ்தவத்திலேயே ஒருத்தனுக்கு ஒரு பெண் மீது பவித்ரமான பிரேமை உண்டாச்சு என்றால் எடுத்தவுடன், அவனுக்கு உடல் இச்சை எழாது......

அவளோடு இருக்க வேண்டும், அந்த கருநீலக்கண்களை பார்க்க வேண்டும், பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், அவளோடு பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும், தன் மனோராஜ்யங்களை சொல்ல வேண்டும் என்று தான் தோன்றும்...... பிள்ளைத்தனமான பாசமும் சிநேகமும் தான் அங்கு இழையோடுமே தவிர கிராமிய சுகத்துக்கு அவன் மனஸ் ஆசைப்படாது.......

உண்மையான காதலுக்கு லக்ஷனமே ஸ்நேகம் தான்! இதைத்தான் வள்ளுவனும் "மடந்தையோடும் எம்மிடை நட்பு" என முழங்கினான்...... கலியான மந்த்ரங்களிலும் சப்தபதி முடிந்ததும் பத்னியை "சகி" என விளிப்பான் கணவன்.......

அப்படி பாசமும் சிநேகமும் ததும்பும் உறவில் தன்முனைப்புக்கும் சண்டைகளுக்கும் இடமிருக்காது...... பச்சை மரமும் பூத்துக்குலுங்கும் கொடியும் அதை வருடி ஓடும் தென்றலும் போல அந்த உறவு இனிக்கும்.

அவர்தம் உடல்களின் இணைவும் கூட அங்கே அவர்களின் அன்புக்கும், பரிபூரண நம்பிக்கையினாலான பரஸ்பர சரணாகதியாகத்தான் இருக்கும்!

பிரியங்களுடன்
புவனேஷ்
 

1 comment:

thanusu said...

நல்ல உவமைகள் கிறக்கமான வர்ணனைகள் ,உண்மையான காதல் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் வரிகள்.