Disable text selection

September 6, 2012

சொல்லத்தெரியாத ஆட்டம் (கவிஞர் தனுசு)

அன்றெல்லாம்
அவளை கானும் போது
ஆணந்தத்தில்
மனசுக்குள் குலவை இசை ஒலிக்கும்! இன்று
காணும் போது
உடையும் மனதின்
விம்மும் குரலை
கேட்கிறேன்!

ஒன்றாய்
ஓடியாடி விளையாடியபோது
அவள்
அடிவயிற்றைப் பிடித்து
சரிந்து உட்கார்ந்த நாளில்
ஓரக்கண்ணால் பார்க்க துவங்கிய
கண்ணாமூச்சி ஆட்டம்
இன்று அவளின்
மெட்டி பூட்டு மனவிழாவில்
முடிந்துபோனது!

இந்த ஆட்டம்
விழியில் களம் அமைத்தாலும்
இதய அரங்கம் ஊமையாகி போனதால்
அவளை
நான் மாலைசூட யோகமில்லை!

புதுமன வாழ்வை துவங்க
விடைபெற்றாள்
புது கணவனோடு!
நானும் விடை கொடுத்தேன்
வறண்டு போன விழியோடு!

தலை முடி கீற்றை
தள்ளும்போதும்
முந்தானை ஓரத்தை
பற்றும்போதும்
அந்த விரல் அசைவு
எதையோ சொல்லியது.

அவளின்
ஓரக்கண்ணின் பார்வை
மீண்டும் எட்டிப்பார்க
என் விழியில் ஈரம் முளைக்க
அதை விழிகளுக்குள்ளேயே
அடக்கம் செய்தேன்!

துனிந்தவனுக்கு துக்கமில்லை!
"நீ ஏன் துனியவில்லை"?
துனியாத எனக்கும் விடை கேட்கிறேன்!

வரையாத கோடுகள்
ஓவியம் ஆவதில்லை!
எழுதாத வார்த்தைகள்
கவிதை ஆவதில்லை!

கிள்ளாத பூவை
சூட முடியுமா?
அருந்தாமல் பாலை
சுவைக்க முடியுமா?

செல்லாத காசை
சேர்த்து என்ன பயன்?
சொல்லத்தெரியாத காதல்
செதிக்கி என்ன பயன்?

-தனுசு-

No comments: