Disable text selection

July 16, 2012

நெஞ்சுக்கறிவுறுத்தல்

ஒண்ணுதல் நிலையாது  நன்னெஞ்சே கன்னிமுலை

இன்றிருக்கும் நாளைவெந்து நீறாகும் - யாண்டும்நீ

வென்றைந்தை  நாளும கிழ்ந்திருக்கக் கன்னியுமை

தண்ணடியே மண்ணிற் றுணை;   

உரை:


ஒளிபொருந்திய நெற்றி கொண்ட பொது மகளிரை நாடாதிரு நன்னெஞ்சே, கன்னியரின் உடல் இன்று இருக்கும் இறந்தபின்னர் சாம்பலாகும், ஐந்து புலன்களையும் வென்று நீ நாளும் மகிழ்ந்திரு, அதற்கு (புலனடக்கத்திற்கு) உனக்கு உண்மையான துணை நித்திய கன்னிகையான அம்பிகையின் குளிர்ச்சி பொருந்திய திருப்பாதங்களே ஆவன. 

ஒண்ணுதல் என்னும் சொல் அழகிய நெற்றியை உடைய பெண் எனும் பொதுவான பொருளை தரினும், இந்த இடத்தில் பொது மகளிரையே குறிக்கும். காரணம் இல்லறத்தில் உள்ள (துறவறம் பூணாத) மக்கள் பெண்ணையே நாடாது இருக்க இயலாது. அவரவர் துணைவியை ஆதரித்து வாழ்வது நன்றேயாகும். கற்பு நெறி தவறி காமமே கண்ணாக பரத்தையரை நாடும் தகாத செயலையே இச்செய்யுள் சாடுகிறது.

No comments: