Disable text selection

August 16, 2012

கருணை மனு

வேளை நெருங்கும் போழ்து
பிரசவ வலி ஒரு வேதனை........
பிள்ளை முகம் பார்க்கும் வரை...... உனக்கென நான்
காத்திருக்கும் கணங்களும் காண், கொடுமை......
உன்மடி வீழும் வரை.....

உன்னிடம் முன் அனுமதி பெற்று தான்
என் தாயின் மடி மேல் வந்தேன் போலும்.......
கண்மறைத்து இன்னும் உன் கண்ணாமூச்சி ஆட்டம்.......
கொடுங்கோலரசி தானடி நீ.......

கருணை மனு போட்டு விட்டேன், உன் முன்.
இனி காத்திருப்பது எத்தனை நாள், சொல்?

No comments: