Disable text selection

July 17, 2012

முறையீடு

சேல்விழியின் சத்தியமும் பேதலித்த புத்திகளும்

ஒருநி லையும்  கண்டதிலை யே;

வேலையற்ற வன்பேச்சும் ஆண்மையற்ற வன்பாட்டும்

ஆழ மெனக் கொள்வதிலை யே;

வணங்குவார் வார்த்தைக்கு வழிவிட்ட தெய்வமென்

வாழ்வில் விளை யாடியது மேன்?

மூலப்பொரு ளானவுமை பாகனொரு நாதமொடு

கோலனட மாடுஞ் சிவ னே;

சோலைகுயில் கூவுமிடம் மான்களிடை நாய்நரியை

ஊளை யிட வைத்தபர னே;

 

 

 

2 comments:

thanusu said...

////வேலையற்ற வன்பேச்சும் ஆண்மையற்ற வன்பாட்டும்

ஆழ மெனக் கொள்வதிலை யே;////

தாங்களின் எழுத்தாற்றல் இந்த இடத்தில் ஜொலிக்கிறது புவனேஷ்.

bdharmal said...

நன்றி, தனுசு அவர்களே! தொடர்ந்து நீங்கள் இங்கே வருவீர்கள் என நம்புகிறேன்!