Disable text selection

July 6, 2012

வால்பையன்!

என் வீட்டிற்கு பக்கத்தில் எல்லாரும் குடும்பஸ்தர்கள். நான் மட்டும் தான் ஒண்டிக்கட்டை. நல்ல பையன் என்ற பேர் வேறா, சுத்தி முத்தி இருக்கற அத்தனை அறுந்த வால்களுக்கும் மாலை வேளைகளில் என் வீட்டு முற்றத்தில் தான் டேரா.

அவர்கள் அப்பாக்காரர்கள் எல்லாம் கடமையே கண்ணாக துபாயிலும் மஸ்கட்டிலும் இருப்பதால் கண்டிக்க ஆளின்றி இதுகள் கொஞ்சம் வால்தனம் ஜாஸ்தியாகவே பண்ணும். (அதில் அவர்கள் அம்மாக்களுக்கு ஏகப்பெருமை வேறு - "அப்படிதான் தம்பி, அடங்கவே மாட்டான், பயப்படவே மாட்டான்" என வாயெல்லாம் பல்லாக அதே சமயம் வெள்ளந்தியாக பையன் புராணம் படிப்பார்கள்).

"நான் இந்தா கோயிலுக்கு போய்ட்டு வர்றேன், அது வரைக்கும் இவனை பாத்துகோங்க தம்பி" என்று சொல்லி விட்டு அதனை பேரும் குட்டீஸ் பட்டாளத்தை என் மடியில் கட்டி விட்டு கிளம்பி விடுவார்கள். சரி அவர்கள் அம்மாக்களுக்கு ஒரு ஓய்வாக இருக்கட்டுமே என்று, அவர்கள் கோயிலுக்கு போய், சாமி கும்பிட்டு, அவர்களுக்குள் கதை பேசி முடித்து விட்டு வரும் வரையில் நானும் இந்த வாண்டுகளை மேய்ப்பதுண்டு.

அதனாலேயே அக்கம் பக்கத்தில் அவர்கள் வீடுகளில் விளைந்த தேங்காய், மாங்காய், சக்கப்பழம் (பலாப்பழம்) இன்ன பிற வகையறாக்கள் நமக்கும் கொடுத்து அந்த அக்காக்கள் அவ்வப்போது அன்புடன் அருள் புரிவார்கள். "எப்ப வேணாலும் வந்து பறிச்சுகிடலாம் தம்பி" என்று சொல்லுவார்கள். நாள் கிழமை ஆனால் பலகாரம் பட்சணமும் அவ்வப்போது கிட்டும்.

இப்படித்தான் நேற்று ஒரு பயலை விட்டு விட்டு போனார்கள். ஒன்றாம் கிளாஸ் படிக்கிறான். "குட்டிப்பையா, இருடா அண்ணன் உனக்கு திங்க எதையாவது கொண்டு வர்றேன்" என்று சொல்லி விட்டு, அவனை முற்றத்தில் விட்டு விட்டு நானும் உள்ளே போனேன்.

அவனுக்கு தீனியோடு வந்து பார்க்கையில் பயல் என் வண்டி சக்கரத்தின் மேல் "ஒன்றுக்கு" அடித்து கொண்டு நின்றான். என்னைப்பார்த்ததும் வாயெல்லாம் இளிப்பு. "ஏண்டா உனக்கு வேற இடமே கிடைக்கலியா?" என கொஞ்சம் சூடாக கேட்டேன். அதற்கு அது சொன்னது: "சக்கரம் அழுக்கா இருக்கில்ல, கழுவரேன்" என்று.........

சரி, பயல் பொழச்சுக்குவான் போலையே, பரவாயில்லை என நினைத்து கொண்டு மேலுக்கு கொஞ்சம் முறைத்து விட்டு இதை அவன் அம்மா கிட்டே அவர் வந்தவுடன் பேசுகையில் சிரித்துக்கொண்டே சீரியசாகாமல் சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த பதில் இருக்கிறதே....... "அவன் அப்படி தான்.... ரொம்ப sharp"..... :-)

அப்புறம் அவர்கள் "தம்பி நான் வேணுமானால் வண்டியை கழுவி கொடுத்து விடுகிறேன்" என வாளியை எடுக்கக்கிளம்ப, நான் தடுக்க இப்படி ஒரே களேபரம் தான் போங்க.

சரியென்று ஒரு வழியாக குட் நைட் சொல்லி வழியனுப்புகையில் "இனிமே அப்படி பண்ணக்கூடாது என்ன?" என்று அவன் அம்மா சொல்ல, அவனோ "நாளைக்கும் பண்ணுவேன்" என்று இளித்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்தானே பார்க்கலாம்.

அதை விட அக்கா முகத்தில் 10 Litres original அசடு வழிந்ததை ரசித்து விட்டு "Doesn't matter; It’s all in the game” என சொல்லி விட்டு வந்தேன்!


4 comments:

akila said...

Nice one..Some way i feel our culture leaves the child to be independent and not restricted like western culture. Whether its good or bad, the child gets to know the after effect of the work he/she did..
Bhuvanesh: I liked the way you wrote it..very simple,jovial but gives a sense of seriousness.good going :)

bdharmal said...

Thanks akka :-)

narayanan said...

என்ன சார், அனுபவத்தை(!!) கதையா அருமையா எழுதிகின்றீர்கள்! அவரவர் தமிழையே மறந்து போயிடராங்க. பாராட்டுக்கள்.

bdharmal said...

தங்கள் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி, ஐயா.